வியாழன், 29 மார்ச், 2012

நீரு பூத்த நெருப்பாய்..


நீயும் நானும்
பார்த்தும் பேசியும்
காலங்கள் பல கடந்து போனோம்

உனக்கு என்னை பிடித்தும்
எனக்கு உன்னை பிடித்தும்
யாருக்கோ பிடிக்காததால்
நாம் பிரிந்து போனோம்

எதிர்பாராமால் நீ எப்போதாவது எதிர்பட
நினைவுகள் நெருஞ்சி முள்ளாய் நெருடும்

வினாடி நேர விழிகளின் சந்திப்பில்
'நலமா' என விழிகள் நனைந்து நிற்கும்

நீயும் நானும் விலகிப் போனாலும்
நீரு பூத்த நெருப்பாய்
நம் காதல் அணையாதிருக்கும்.


 -விவேகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக