புதன், 28 மார்ச், 2012

இவை...


வியர்த்து புழுங்கும் வாழ்க்கை ஊடே
மெல்ல வீசும் மாலைத் தென்றல்

'சோ'வென கூச்சலிட்டு
மண் கிளறி வாசம் பிடிக்கும் மழை

பேரூந்து பயணங்களில்
விழிகளில் விரியும் பச்சை வயல்

எழுத்தில் கோர்க்க முடியா எண்ணங்களில்
எப்போதாவது தோன்றும் கவிதை

நித்திரை களைத்து
நெஞ்சை நெகிழ்த்தும் சங்கீதம்

தோல்விகளால் துவண்டு சரிகையில்
தோள் கொடுக்கும் நட்பின் ஆறுதல்

தவுறுகள் தலையில் குட்டுகையில்
தடவிக் கொடுக்கும் தாய்மை

இவை..
என் விழிநீர் துடைக்கும்
விரக்தியில் வீழ்ந்து விடாது
என் விரல் பற்றும்.

 -விவேகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக