வெள்ளி, 6 ஏப்ரல், 2012

எப்படி உணர்த்துவேன்




மெல்ல சலசலத்து போகிற நீரோடையில்
கால் மட்டும் நனைய
கரையோரம் அமர்ந்திருப்பது போலிருக்கிறது
உன்னோடு பேசிக் கொண்டிருக்கையில்

சமயங்களில்
சூழ்நிலையின் குரோதங்களுக்குப் பயந்து
'அப்புறம் பேசலாம்' என
நகர்ந்து போகிற என்னை கோபிக்கிற உனக்கு

எப்படி உணர்த்துவேன்
பல்லின் வாலாய் அறுந்து துடிக்கிற மனதை.

- விவேகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக