ஞாயிறு, 21 அக்டோபர், 2012

இசைவானதொரு...

நான் சொல்வதுனக்கும்
நீ சொல்வது எனக்கும்
புரியாமல் போகிறது
சமயங்களில்.

சாட்டையென
நீண்டு சொடுக்குகிறது உன் நாக்கு
குருதி கட்டிய தடிப்புகளாய்
பரவுகிறது துக்கம்.

உன்னிடம் நான் கேட்பதெல்லாம்
விரிந்த வான்வெளியில்லை
இசைவானதொரு கூடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக