சொற்களை பகடையாய் உருட்டுகிறாய்
உன் கண் அசைவில் புரண்டு தாயங்களாகின்றன
சில நேரங்களில் வெறும் குறிப்புகளையாய்
இருக்கிறது உன் உரையாடல்கள்
வெறுமனே சலனமற்று
ஒரு நாடகத்தின் உரையாடலை கேட்பது
என்னை சலிப்படைய வைக்கிறது
பனிக்கட்டியாய் உருகும் வார்த்தைகளில்
நீ சொல்லாத சொற்களும் இருப்பதை நானறிவேன்
உன் சொற்களின் லாவகம்
பலவீனமான என் இதயத்தை அதிர்விக்கின்றன
உன் சொற்கள்
என் கபாலத்தில் எதிரொலித்து
நெற்றிப்பொட்டில் வலியாய் பரவுகிறது
சமயங்களில்
என் எதிர்சொற்கள்
உன் ஒற்றைச் சொல்லில்
குருதி சொட்ட விழ்கின்றன
க.விவேகானந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக