புதன், 11 ஏப்ரல், 2012

தரிசனம்




திருவிழா கூட்டத்திடையே
உன் வரவு
என் மேனியெங்கும் பரப்பும்
மெல்லிய சந்தோஷம்

கள்ளவிழிப் பார்வையிலே
கரைந்து போகும் நேரம்
எவர் எவரோ உன்முகம் மறைக்க
மெளனமாய் ஏங்கும் மனசு

பேச ஆயிரமிருந்தும்
ஊமைகளாய் உதடுகள்
போய்வரேன் என சொல்ல
முடியாத வேதனை

இன்றைய இரவின்
உறக்கம் கெடுக்கும் உன் நினைவு
நினைவுகளோடு புரண்டு படுக்கையில்
நிச்சயம் பூக்கும் கவிதை

எழுதிய கவிதை புரட்டிப் பார்க்கையில்
மறுபடி மறுபடி உன் தரிசனம்
மனதின் பக்கங்களை
மயிலிறகாய் வருடும்

விவேகா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக