வியாழன், 12 ஏப்ரல், 2012

புறக்கணித்தென்னை...























நீ என்னை புறக்கணித்து
தூக்கியெறிந்த இடம்
இலந்தை முட்கள் அடர்ந்த
இடுகாட்டுப் பிணங்களின் புதைகுழி.

மெளனத்தைக் கொல்கிற
ஆவேசத்தோடு மண்டையோடுகள் சிரிக்க
அழுகி நாற்றமடிக்கும் பிணக்கழிவில்
முட்கள் கிழித்து குறுதி கசியும்
என் உடம்பை துடைத்தபடி
வழுக்கி வழுக்கி வீழ்ந்து 
மெல்ல மெல்ல
செத்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வேளை
நான் உயிர் பிழைத்து எழுந்து வந்தால்
உன் கூரிய நகங்களால்
என் இதயத்தை கிழித்து
துஷ்ட தேவதைகளுக்கு பழியிடு
ஒரு சுனியக்காரியைப் போல

அல்லது
உன் வலுவெல்லாம் திரட்டி
என் மண்டையோடு சிதற
கபாலத்தை உடைத்தெறி.

மண்டையோடு சிதைந்த
என் பிணத்தின் மீது கால் வைத்து
மயானத்தில் ஒளிந்திருக்கிற
பேய்களும் பிசாசுகளும்
பயந்து நடுங்கியோட கூக்குரலிடு.

இனி நேசத்தை சொல்கிறவர்களின் 
நாக்குகள் அறுக்கப்படுமென.

-விவேகா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக