வெள்ளி, 13 ஏப்ரல், 2012

காதலின் மொழி!




பேசாது  பேசும் பெருவிழிகளுனக்கு...

 உன் தோள் சாய்ந்து
கைவளையலை வருடியபடி
மெளனமாய் கழிந்திருக்கின்றன
பல யெளவன பொழுதுகள்.

காதலுக்கெதிரான கயவர்கள்
நம் நாவறுத்த பின்னும்
இன்றைக்கும்
பேசாது பேசுகின்றோம்.

பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை
காதலின் மொழி மெளனமென்று.

-விவேகா





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக