சனி, 14 ஏப்ரல், 2012

அரிதாரம்



யாரும் அறிந்து கொள்ள முடியாத
அரிதார அடுக்குகளால்
ஆகி போனதென் முகம்.

நீங்கள் நினைத்திருக்கிறபடி
நானில்லை என்பது
எனக்கு மட்டுமே தெரியும்.

நான் நானாயிருக்கிற சந்தர்பங்கள்
எப்போதாவதுதான் வாய்க்கிறதெனக்கு.

மதிப்பீடுகள் அனைத்தும் 
மாறிப்போகிற கால ஓட்டத்தில்
நீங்கள் நினைத்திருக்கிறபடியே
நாளை நான் மாறிப்போகலாம்.

யாரும் அறியாதபடி.

- விவேகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக