அரிதார அடுக்குகளால்
ஆகி போனதென் முகம்.
நீங்கள் நினைத்திருக்கிறபடி
நானில்லை என்பது
எனக்கு மட்டுமே தெரியும்.
நான் நானாயிருக்கிற சந்தர்பங்கள்
எப்போதாவதுதான் வாய்க்கிறதெனக்கு.
மதிப்பீடுகள் அனைத்தும்
மாறிப்போகிற கால ஓட்டத்தில்
நீங்கள் நினைத்திருக்கிறபடியே
நாளை நான் மாறிப்போகலாம்.
யாரும் அறியாதபடி.
- விவேகா
- விவேகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக